புதுதில்லி: நாட்டில் உள்ள ஏழு ஐஐடிக்களில் இந்தக் கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக 9 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுதில்லி: நாட்டில் உள்ள ஏழு ஐஐடிக்களில் இந்தக் கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக 9 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எனினும் இந்த ஆண்டில் பிகார், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாகத் தொடங்கப்படும் ஐஐடிக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஐஐடிக்களில் ஒவ்வொன்றிலும் தலா 120 இடங்கள் இருக்கும்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக தில்லி, கான்பூர், கரக்பூர், மும்பை, ரூர்க்கி குவாஹாட்டி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஐஐடிக்களில் 13 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. இதனால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த இடங்களின் எண்ணிக்கை குறையாமல் அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.