கொல்கத்தா: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கேட் (நிகிஜிணி) தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கேட் நுழைவுத் தேர்வில் இவர்கள் இருவரும் 99.9 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கொல்கத்தா: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கேட் (நிகிஜிணி) தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கேட் நுழைவுத் தேர்வில் இவர்கள் இருவரும் 99.9 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதியாண்டு படிக்கும் சௌரவ் தத்தா, அர்ப்பன் சட்டோபாத்யாய ஆகிய இருவருக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைத்துள்ள போதிலும்கூட, கேட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளதால் பணிகளுக்குச் செல்லாமல் மேற்படிப்புப் படிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் படிக்கும் சௌரவிற்கு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அடோப் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஐஐடி கான்பூரில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கத் திட்டமிட்டுள்ளார் அவர். பிளஸ் டூ படித்த பிறகு நுழைவுத் தேர்வு மூலம் ஐஐடியில் சேர முடியாமல் போன சௌரவின் கனவு தற்போது கேட் தேர்வில் நாட்டிலேயே முதலிடத்தை எட்டிப் பிடித்துச் சாதனை படைத்ததன் மூலம் நிறைவேறப் போகிறது.
இதேபோல ஐஐடியில் சேர முயற்சி செய்து முடியாமல் போன அர்ப்பன், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி படித்தார். தற்போது ஐஐடியில் எம்.டெக். படிக்க வாய்ப்பு உள்ளபோதிலும்கூட, அதில் சேர தற்போது விருப்பமில்லை. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் மேற்படிப்புப் படிக்கத் திட்டமிட்டுள்ளார்.