மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் | Kalvimalar - News

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு புதிய துணைவேந்தர்

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.டி. சபாபதி மோகன், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.டி. சபாபதி மோகன், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான எஸ்.எஸ். பர்னாலா பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள்.


1991-ஆம் ஆண்டில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் சபாபதி மோகன். 2004-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், அண்மையில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us