சத்தியமங்கலம்: பன்னாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது.
சத்தியமங்கலம்: பன்னாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்களின் தேவையையும் தொழில் துறையின் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை மாற்ற இக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்குப் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த முடியும் என்று கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.