சப்-ஆட்டோமிக் பார்டிகிள் முதற்கொண்டு, ஏறக்குறைய இயற்பியலின் அனைத்து துறைகள் பற்றியும் இயற்பியலைப் பற்றி ஆழ்ந்து படித்து, ஆராய்ச்சி செய்பவர் இயற்பியல் விஞ்ஞானி ஆவார். நீங்கள் இயற்பியல் விஞ்ஞானி ஆகவேண்டுமெனில், உங்களின் பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, லயோலா அல்லது பிஎஸ்ஜி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும்.
இளநிலைப் படிப்பை மேற்கொள்ளும்போதே, எம்எஸ்சி படிப்பிற்காக நடத்தப்படும், கூட்டு நுழைவுத் தேர்வை எழுத பயிற்சி எடுக்க வேண்டும். இந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் மூலமாகத்தான், ஐஐடி அல்லது புனே பல்கலைக்கழகத்தில், முதுநிலை இயற்பியில் படிப்பில் சேர முடியும். முதுநிலைப் படிப்பை முடித்தப்பிறகு, உங்களுக்குத் தொடர்புடைய துறையில், முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு, இயற்பியில் விஞ்ஞானியாக ஆகலாம்.