கூச்ச சுபாவமே மாணவர்களுக்கு எதிரி | Kalvimalar - News

கூச்ச சுபாவமே மாணவர்களுக்கு எதிரி

எழுத்தின் அளவு :

"கூச்ச மனப்பான்மையே இந்திய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எதிரி" என, சிங்கப்பூர் வேலைவாய்ப்பு வளம் கவுன்சிலின் செயலர் ஜோய்டன் கூறினார்.

அமெரிக்கன் கல்லூரி விழாவில் அவர் பேசியதாவது: இந்திய மாணவர்களுக்கு கூச்ச மனப்பான்மை அதிகம். வெளி உலக தொடர்பு குறைவு. மதுரையை சேர்ந்தவர், மதுரையில் தான் படிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளார். வெளிநாட்டு கல்வியை நாடினால் தான், வாழ்க்கைத்தரம் உயரும்.

பரப்பளவில் மதுரை அளவு இருந்தாலும், சிங்கப்பூரின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தியாவில் வணிகவியல் படிப்பவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக எம்.எஸ்., படிப்பை வெளிநாடுகள் வழங்குகின்றன. சிங்கப்பூரில் படிப்பவர்களுக்கு, இங்கிலாந்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இங்கு ரூ.3 லட்சம் ஆகும் செலவு, அங்கு ஏழு லட்சமாக இருக்கும். எம்.எஸ்., எம்.சி.ஏ., படிக்க இந்தியா வங்கிகள் கடனுதவி தருகின்றன  என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us