கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் என்ற நிறுவனமானது, ஆர்கிடெக்டுகளின் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, இத்துறை தொடர்பான கல்வி மற்றும் தொழிலை, இந்தியாவில் முறைப்படுத்துகிறது. ஒருவர் ஆர்கிடெக்டாக தொழில்புரிய வேண்டுமெனில், இந்த கவுன்சிலில் பதிவுசெய்ய வேண்டும்.
இந்த பதிவை மேற்கொள்ள, ஒருவர் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதிவானது, ஒருவர், டைட்டில் மற்றும் ஆர்கிடெக்ட் Style -ஐ பயன்படுத்த அதிகாரமளிக்கிறது. இந்த கவுன்சிலில் பதிவுசெய்துள்ள ஆர்கிடெக்டுகளின் அமைப்பு, இந்த டைட்டில் மற்றும் ஸ்டைலைப் பயன்படுத்த முடியும்.
லிமிடெட் கம்பெனிகள், தனியார் மற்றும் பப்ளிக் நிறுவனங்கள், சொசைட்டிகள் மற்றும் இதர சட்டம் தொடர்பான நபர்கள் ஆகியோர் இந்த Title மற்றும் Style -ஐ பயன்படுத்த முடியாது மற்றும் இந்த ஆர்கிடெக்ட் தொழிலை மேற்கொள்ள முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை வழங்கும் ஆர்கிடெக்சர் தொடர்பான படிப்புகளை இந்தியாவில் மொத்தம் 135 கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளின் தர நிலைகள், ஆர்கிடெக்சர் கவுன்சிலால் மதிப்பிடப்படுகின்றன.
கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் விதிமுறைகள், 1983, இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தகுதிகள், படிப்பின் காலஅளவு, ஊழியர்களின் தர நிலைகள் மற்றும் தங்குமிடம், பாட உள்ளடக்கம் மற்றும் தேர்வு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன.