எனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்?ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் எம்.சி.ஏ., படித்த ஒருவர், கீழ்காணும் பணி நிலைகளுக்கு பொருத்தமானவராக இருப்பார். அவை,

அப்ளிகேஷன் ப்ரோகிராமர், கம்ப்யூட்டர் கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் செக்யூரிட்டி அனலிஸ்ட், டேட்டா கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட், மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட், சிஸ்டம்ஸ் அனலிஸ்ட், சிஸ்டம் டிசைன் ஸ்பெஷலிஸ்ட் அல்லது சிஸ்டம் டெவலப்மென்ட் மேனேஜர் போன்றவையே அவை.

நெட்வொர்க்கிங் துறைக்கு அடிப்படையே, ஹார்டுவேர் பற்றிய அறிவுதான். உங்களைப் பொறுத்தவரை, அனலைசிங், இன்ஸ்டாலிங் மற்றும் நிறுவனத்தின் நெட்வொர்க்கை கான்பிகுரிங் செய்தல் போன்ற பணிகளுக்கு பொறுப்பான, நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர் என்ற பணிக்கு, ஆரம்ப நிலையில், செல்லலாம். பின்னர், போதுமான அனுபவம் பெற்று, தேவையான சான்றுகளைப் பெற்ற பிறகு, நெட்வொர்க் ப்ரோகிராமர் அல்லது நெட்வொர்க் அல்லது இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மேனேஜர் என்ற நிலைகளுக்கு செல்லலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us