மெட்ரிக் தேர்வில் 472 மார்க் எடுத்து அழகப்பா மெட்ரிக்.,பள்ளி மாணவி ஆர்.ஈஸ்வரிமீனா தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடுமையாக முயற்சி செய்து படித்ததால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். தேர்வு நேரத்தில் எனக்கு உடல், மனரீதியாக டென்ஷன் இருந்தது. இருப்பினும் பள்ளியில் அனைத்து பாடங்களையும் நன்கு படிக்க பழகிக்கொடுத்தனர். இதனால் ரிலாக்ஸாக தேர்வு எழுதியதால் சாதிக்க முடிந்தது. பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கவேண்டும். அப்போது தான் மனதில் என்றைக்கும் நிற்கும். டென்ஷன் இல்லாமல் புரிந்துபடித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றார்.