சுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

சுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.ஆகஸ்ட் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

வெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம்.

 

இயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன.

 

சுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட் லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது. இத்துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் தருகின்றன.
 சமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன. நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத்துறை தருவதால் இப் படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

 

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெகராடூனில் உள்ள வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புதுடில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லியிலுள்ள ஜமியா ஹம்டார்ட் பல்கலைக்கழகம், பந்த்நகரிலுள்ள ஜி.பி. பந்த் விவசாய பல்கலைக்         கழகம் ஆகியவை இத்துறையில் சிறப்புப் படிப்புகளைத் தரும்       நிறுவனங்களாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us