பேங்க் ஆப் பரோடா | Kalvimalar - News

பேங்க் ஆப் பரோடா

எழுத்தின் அளவு :

பேங்க் ஆப் பரோடா பள்ளி மாணவர்களுக்கு பரோடா வித்யா என்ற பெயரிலும், இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பரோடா கியான் என்ற பெயரிலும், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பரோடா ஸ்காலர் என்ற பெயர்களில் கல்விக் கடன்களை வழங்குகிறது.

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

  • நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • வட்டி விகிதம்:

    நான்கு லட்சம் ரூபாய் வரை: பி.பி.எல்.ஆர்., (2.00 சதவீதம் above BR)


    நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்: பி.பி.எல்.ஆர்., (4.00 % சதவீதம் above BR)

    கடனை திருப்பி செலுத்தும் முறை:

    படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

    உத்தரவாதம்:
    நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம்.

    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை.

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us