மதுரை: மாணவி முகுந்தபிரியா, 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த இவரது தந்தை சுந்தரராமன் கனரா வங்கியிலும், தாய் அலமேலு பி.எஸ்.என்.எல்., அதிகாரியாகவும் உள்ளனர்.
முகுந்தபிரியா பெற்ற மதிப்பெண்கள்: ஆங்கிலம் - 95, சுற்றுப்புறச்சூழல் கல்வி - 95, கணிதம் - 100, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 100, இயற்பியல் - 98, வேதியியல் - 96.
அவர் கூறியதாவது: பள்ளி ஆசிரியர்களின் ஆர்வமான கற்பித்தல், பயிற்சியால் மாநில ரேங்க் பெற்றேன். தேர்வுக்கு முன் ஆறு மாதங்களாக குழுவாக இன்றி, தனியாக அமர்ந்து படித்தேன். எழுதிப் பார்ப்பது என்றில்லாமல், நிறைய படிப்பேன். சக மாணவியரும் எனக்கு உதவியுள்ளனர்.
பெற்றோர் என்னை முதல் மாணவியாக வர வேண்டும் என, வற்புறுத்துவதெல்லாம் கிடையாது. படிக்க ஒத்துழைப்பதோடு சரி. ஆசிரியர்களோ, பெற்றோரோ முதல் ரேங்க் பெற வேண்டும் என, பிரஷர் தரவில்லை. தேர்வு நேரத்தில் வேறெதிலும் ஆர்வம் காட்டாமல், படிப்பில் கவனம் செலுத்தினால் சாதிக்க முடியும் என்றார்.