ஜனனி (10ம் வகுப்பு - மாநில நான்காமிடம்) 2012 | Kalvimalar - News

ஜனனி (10ம் வகுப்பு - மாநில நான்காமிடம்) 2012

எழுத்தின் அளவு :

மாநில அளவில் நான்காமிடம் இடம்பெற்ற ஜனனி: வகுப்பில் பாடங்கள் நடத்தப்படும்போது, கூர்ந்து கவனித்து உள்வாங்கினேன். அதிக மதிப்பெண்களை குவித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள மாணவி ஜனனி.

ஆங்கிலம் மற்றும் சமூக கல்வியில், நூற்றுக்கு நூறு பெற்றுள்ள, சென்னை, முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி, 10ம் வகுப்பு தேர்வில், ஆங்கில பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழில் 96, ஆங்கிலம் மற்றும் சமூக கல்வியில் 100, கணிதத்தில் 99, அறிவியலில் 99 என, 494 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஜனனியின் தந்தை அனந்தராமன், சுங்கத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஆங்கில பாடத்தில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது குறித்து, ஜனனி தெரிவித்ததாவது: மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்த்தேன். அது நிறைவேறவில்லை என்றாலும், மாநில அளவில், ஆங்கில பாடத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது, எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் டியூசன் எல்லாம் போகவில்லை. வகுப்பில் பாடங்கள் நடத்தப்படும்போது, கூர்ந்து கவனித்து உள்வாங்கினேன். பிறகு, அன்றாட பாடங்களை, காலையிலும் மாலையிலும் ஒழுங்காக படித்து முடித்தேன். தொலைக்காட்சியை பார்ப்பது, தோழிகளோடு அரட்டை அடிப்பது போன்ற விஷயங்களை தவிர்க்கவில்லை, என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us