சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜஸ்டின் சேவியர். இவர், தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவர் ஜஸ்டின் சேவியர் கூறியதாவது: பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த, பாடங்களை கவனமுடன் படித்தேன்.
பெற்றோரும் என்னை உற்சாகப்படுத்தினர். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஆவதே எனது லட்சியம். அதற்காக கவனமாகப் படித்து கடுமையாக உழைப்பேன். இவ்வாறு ஜஸ்டின் சேவியர் கூறினார்.