பூஜாஸ்ரீ (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம்) 2012 | Kalvimalar - News

பூஜாஸ்ரீ (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம்) 2012

எழுத்தின் அளவு :

ராசிபுரம் எஸ்.ஆர்.வி., ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பூஜாஸ்ரீ, 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர், தமிழில், 99, ஆங்கிலத்தில் 99, கணித பாடத்தில் 97, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 495 மதிப்பெண் பெற்றார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கிருஷ்ணன் கொட்டகையை சேர்ந்த மாணவி பூஜாஸ்ரீயின் தந்தை பழனிசாமி விவசாயி. தாய் கவிதா, ரிஷிகுமார் என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் தம்பி உள்ளார்.

மாணவி பூஜாஸ்ரீ கூறியதாவது: வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஆவதே என் லட்சியம். விடுதியில் தங்கிப் படித்ததால், படிப்பதற்கு அதிக நேரம் கிடைத்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிக்கத் துவங்கி விடுவேன். இரவு 12 மணி வரைக்கும் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டும். என் வெற்றிக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஊக்கம் அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us