நாகர்கோவில் ஹெர்பான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெங்கின்ஸ் காட்பரி 500-க்கு 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 98 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவரது தந்தை ஸ்டான்லி ஜெபம் தனியார் பொறியில் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தாய் ஷெர்லின் அஜ்னிஜா ஆசிரியையாக உள்ளார். டிவி பார்க்காமல் படித்ததால், இந்த உயர்வை எட்ட முடிந்தது என்றும் மாணவர் தெரிவித்தார்.