இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா: பத்தாம் வகுப்பு தேர்வில் புழுதிவாக்கம், வியாச வித்யாலயா பள்ளி மாணவி, அகிலா, 496 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழில் 99, ஆங்கிலம் 98, கணிதம்99, கணிதம் 99, அறிவியல் 100 மற்றும் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில், பாட வாரியாக தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வேளச்சேரி, ஸ்ரீநகர் காலனியில் வசிக்கிறார். இவரது தந்தை நாகராஜ் பொறியாளர். தாய் கவிதா.
சாதனை படைத்தது குறித்து அகிலா கூறியதாவது: சமச்சீர் கல்வி கொண்டு வந்த பிறகு சற்று பயம் இருந்தது. எனவே, ஆரம்பத்தில் இருந்தே, பள்ளியில் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். பாட புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் திரும்ப திரும்ப படித்து பார்த்தேன். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படிப்பேன், இரவு 10.30 வரை படிப்பேன். மாநில அளவில் இரண்டாம் இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிளஸ் 1 ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படிக்கவுள்ளேன். வரும் காலத்தில் சிவில் இன்ஜினியராக வரவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இவ்வாறு அகிலா தெரிவித்தார்.