தமனா சரோயா (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம்) 2012 | Kalvimalar - News

தமனா சரோயா (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம்) 2012

எழுத்தின் அளவு :

ஈரோடு, யு.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தமனா சரோயா, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 496 மார்க் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். இவர், இந்தி - 98, ஆங்கிலம் - 100, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 98, மொத்தம் - 496.

மாணவி தமனா சரோயா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜேசீஸ் சரோயா, ஈரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மானேஜராக உள்ளார். தாய் சுலோச்சனா சரோயா குடும்பத் தலைவி.

மாணவி தமனா சரோயா கூறியதாவது: வகுப்பில் பாடங்களை நன்றாக கவனிப்பேன். சமச்சீர் கல்வி பாடம் எளிதாக இருந்தது. தினமும், இரண்டு முதல் மூன்று மணி நேரம் படிப்பேன். வகுப்பில் கொடுக்கும் வீட்டுப்பாடம், புத்தகம் படிப்பது மட்டுமே என் பொழுதுபோக்கு. மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us