மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யா சிவசங்கரி, தாவரவியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறும் போது, "எனது பெற்றோர் வெளியூரில் வேலை பார்த்ததால், எனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தேன். ஆசியர்களின் நல்ல முயற்சியே என்னை இந்தளவு மார்க்குகள் வாங்க உதவியது.
நான் தினமும் காலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரையிலும் படிப்பேன். "டிவி" பார்ப்பதை தவிர்த்தேன்" என்றார்.