சின்னாளபட்டி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அந்தோணி, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜாக்குலின் ராணி. இவர்களது மகன் அமல்ராஜ், மகள் விக்டோரியா ராணி. இவர்கள், காந்திகிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.
"இந்திய கலாச்சாரம்" பாடத்தில் விக்டோரியா ராணி 186 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மொத்த மதிப்பெண்கள் 1045. விக்டோரியா ராணி கூறுகையில், "குடும்பத்தின் வறுமை என்னை நன்றாக படிக்க தூண்டியது. அதிக மதிப்பெண் எடுத்து உயர்கல்வி பெற்றால்தான், வேலைக்கு செல்ல முடியும்.
பெற்றோரின் சிரமத்தை போக்க முடியும் என்பதை உணர்ந்து படித்தேன். "டிவி"யில் செய்திகள் மட்டும் பார்ப்பேன். தினமலர் நாளிதழ் நடத்த்திய "ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கு வழங்கப்பட்ட புத்தகத்தை படித்ததன் மூலம் பயமின்றி தேர்வு எழுத முடிந்தது.
தலைமை ஆசிரியை வள்ளி, ஆசிரியை நவநீதகுமாரி, இந்திய கலாச்சாரம் பாடத்தில் மாநில ரேங்க் எடுக்க வேண்டும் என எனக்கு ஊக்கப்படுத்தினர்" என்றார்.