திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வின்சி நுண்ணுயிரியல் பாடத்தில் 193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தை பிடித்தார்.
வின்சி கூறும் போது, "எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்கின்றனர். தினமும் இரவு 10 மணி வரையிலும், அதிகாலை 3 மணி முதலும் படிப்பேன்.
எங்கள் வீட்டில் யாரும், நான் படிக்கும் போது, "டிவி"யை இயக்குவது கிடையாது. ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பு வகுப்புக்கள் நடத்தினர். மின்வெட்டு குறைந்திருந்தால் மற்ற பாடங்களிலும், நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்க முடியும்" என்றார்.