விஜயா வங்கி | Kalvimalar - News

விஜயா வங்கி

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 

செலுத்த வேண்டிய முன்தொகை:

  1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
  2. நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம் 

வட்டி விகிதம்:

  • பி.பி.எல்.ஆர்., மைனஸ் 1.25% (ப்லோடிங்)

மாணவிகளுக்கு 0.50 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும்.

கடனை திருப்பி செலுத்தும் முறை:

படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும்.  

உத்தரவாதம்:

நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.

நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை

ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us