மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா. இவர் அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் 189 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் எடுத்த மொத்த மதிப்பெண்கள் 1035.
மாணவி சந்தியா கூறியதாவது: "தந்தை ரவி கூலி தொழிலாளி. தந்தையின் கஷ்டத்தை போக்க வேண்டும். அதற்காக படிப்பில் முழு கவனம் செலுத்தினேன். "டிவி" பார்க்காமல் படித்ததால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. ஆசிரியை ஆக விரும்புகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.