தற்போது ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு நிலையில் குறிப்பாக பொறியியல்,தொழிற்நுட்பவியல் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற விரும்பும் பணியிலுள்ள மாணவ / மாணவியர் அல்லது அவரின் பெற்றோர் / பாதுகாவலரின் மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமலிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இக்கல்வி உதவித்தொகை பெற 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.