படுவேகமாக அனைவரிடமும் ஆர்வத்தைத் தூண்டிவரும் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்ட துறையாக உருவாகி வரும் மரைன் துறையின் 2 பிரிவுகளாக நாட்டிகல் சயின்ஸ் மற்றும் மரைன் இன்ஜினியரிங்கைக் கூறலாம். நாடிகல் சயின்சைப் பொறுத்தவரை பி.எஸ்சி. படிப்பு தரப்படுகிறது. டெக் கேடட்டிலிருந்து ஒரு கப்பலின் கேப்டன் பதவி வரை வாய்ப்புகளைத் தரும் படிப்பு இது.
மரைன் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது பி.எஸ்சி., படிப்பை நீங்கள் மேற்கொள்ள முடியும். 5வது இன்ஜினியர் என்ற நிலையிலிருந்து 4, 3 என பதவி உயர்வைத் தரக்கூடிய இந்தப் படிப்பானது சீப் இன்ஜினியர் பதவி வரை உங்களை மேம்படுத்தக்கூடியது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என ஒரு கப்பலின் டெக்னிகல் பணிகளை மேற்கொள்வது மரைன் இன்ஜினியர் தான். 25 ஆயிரத்தில் தொடங்கி தொடக்கத்திலேயே 40 ஆயிரம் வரை மாதச் சம்பளத்தைத் தரக்கூடிய படிப்பு இது.
பணி அனுபவம் கூடக் கூட மாதம் ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும். இதற்கு பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். 17 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 150 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மருத்துவத் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
இத்துறையில் சிறப்பான படிப்பை மதுரையிலுள்ள ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் தருகிறது. இது அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள டி.வி.ஆர்.நகரில் உள்ளது. இந்த நிறுவனம் புகழ் பெற்ற பிட்ஸ் (பிலானி) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேசத் தரத்தில் பி.எஸ். நாடிகல் சயின்ஸ் மற்றும் பி.எஸ். மரைன் இன்ஜினியரிங் படிப்புகளைத் தருகிறது.