கல்விக் கடன் தொகை அளவு:
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
திறமையான தகுதியுள்ள மாணவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகைக்கு மேலும் கடன் வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய முன்தொகை:
வட்டி விகிதம்:
* Upto Rs.7.50 lakhs -14.00 % p.a.
* Above Rs.7.50 lakhs - Rs.14.25 % p.a.
மாணவிகளுக்கு 0.50 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும்.
கடனை திருப்பி செலுத்தும் முறை:
படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை.
ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்: சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.