யசோதா (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம் : 2013) | Kalvimalar - News

யசோதா (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

திருச்செங்கோடு அவ்வை கே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி மாணவி யசோதா, 500க்கு, 497 மதிப்பெண்ணுடன், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர், தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணித பாடத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99, என, மொத்தம் 497 மதிப்பெண் பெற்றார்.

திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவி யசோதாவின் தந்தை செல்வராஜ், லாரி டிரைவர். இது குறித்து மாணவி யசோதா கூறுகையில், "கடினமாக உழைத்ததால், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்க முடிந்தது. பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் காரணத்தால், நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றேன். எதிர் காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதே எனது கனவு," என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us