ஓசூர் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சிந்து, 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.
இவரது தந்தை சிவப்பா, கோழிப்பண்ணை வைத்துள்ளார். தாய் அஸ்வத்ம்மா உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
சாதனை குறித்து மாணவி சிந்து கூறியது: "ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தந்த ஊக்கம் மாநில அளவில் ரேங்க் பெற்று தந்துள்ளது. பள்ளி விடுதியில் தங்கி படித்த நான் "டிவி" பார்பது இல்லை.
பள்ளியில் தினம் தேர்வு வைத்து அதில் இருந்த சிறு பிழைகளை எவ்வாறு திருத்தி கொள்வது என்பது குறித்து ஆசிரியர்கள் கூறினார்கள். இந்த பிழைகளை திருத்தி தேர்வு எழுதியதால் நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. ப்ளஸ் 2 முடித்துவிட்டு டாக்டருக்கு படிக்க உள்ளேன்." இவ்வாறு கூறினார்.