பணகுடி, செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சோனாலி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்-98, ஆங்கிலம்-98, கணக்கு-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது தந்தை தேவபாலன் வெளிநாட்டில் சர்வீஸ் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தாய் மார்க்ரெட் லீலா அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மாணவியின் சகோதரி கீர்த்திகா அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
சாதனை படைத்த மாணவி கூறும்போது, "இந்த வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இந்த வெற்றியை எனக்காக உழைத்து ஊக்கமளித்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ், படித்து நாட்டிற்கு நல்ல குடிமகனாக சேவை செய்ய விரும்புகிறேன்" என்றார்.