சினேகிதா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

சினேகிதா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

தஞ்சை பொன்னையா ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சினேகிதா எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் பெற்ற மார்க்குகள், பாடவாரியாக வருமாறு: தமிழ் 97, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100, மொத்தம் மார்க் 496.

மாநில சாதனையை பெற்றது குறித்து, மாணவி சினேகிதா கூறுகையில், "எனது தந்தை ராஜேந்திரன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தாய் சித்ரா, தம்பி ஸ்ரீவத்ஸவா. தஞ்சையை அடுத்த வல்லம் அண்ணா நகரில் வசிக்கிறோம். கடுமையாக, பாடங்களை கவனம் செலுத்தி படித்ததால் மாநிலத்தில் மூன்றாமிடத்தை பிடிக்க முடிந்தது.

மேலும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் "சென்டம்" பிடித்ததால்தான் மாநில அளவில் சாதிக்க முடிந்துள்ளது.

இதற்கு ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், பயிற்சியும் தான் காரணம் ஆகும். எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ்., படித்து, டாக்டராகி ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். இதுவே எனது லட்சியம் ஆகும்" என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us