கல்பனா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

கல்பனா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

மாநில மூன்றாமிடம் பிடித்த மாணவி கல்பனா, தஞ்சை தூய வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார்.

இவரது தந்தை ரவி, தாய் வித்யா, தம்பி ஸ்ரீராம். இவர்கள் தஞ்சை பூக்கார புதுலாயம் பகுதியில் வசிக்கின்றனர். தந்தை ரவி, திருச்சி பொன்மலை பணிமனையில், தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வருகிறார்.

மாணவி கல்பனா பாடவாரியாக பெற்ற மார்க் விபரம் வருமாறு: தமிழ் 98, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100. மொத்தம் 496.

மாணவி கல்பனா கூறுகையில், "நான் டியூசனுக்கு போகவில்லை. இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பிப்பதை நன்றாக கவனித்து படித்து வந்தேன். தினமும் பாடப்புத்தகங்களை தவறாமல் எடுத்து, படித்து, பயிற்சி எடுத்து வந்தாலே அதிக மார்க் பெற முடியும். வீட்டில் வந்தாலும் புத்தகத்தை மறந்து விடக்கூடாது. தவறாமல் கேள்வி, பதில்களை பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் டாக்டராவதே எனது லட்சியம்" என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us