ரோசன் சபிஹா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

ரோசன் சபிஹா (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 496 மார்க் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடத்தை  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரோசன் சபிஹா வகிக்கிறார்.

இவரது தந்தை முகமது ரபீக், தாய் சாரா அம்மாள். மாணவி பெற்ற மார்க் விபரம்: தமிழ் 98, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என, மொத்தம் 496 மார்க்.

மாணவி ரோசன் சபிஹா கூறுகையில், "டியூசன் சென்று படிக்கவில்லை. ஆனாலும் ஆசிரியர் கற்று கொடுத்த பாடங்களை அன்றைக்கே வீட்டுக்கு சென்று தவறாமல் படித்தேன். இதனால் தான், பாடங்களையும், கேள்விகளையும் மறக்காமல் பதில் எழுத முடிந்தது. எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்க விருப்பம்" என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us