காயத்திரி கூறுகையில், "அப்பா கண்ணன் தங்கநகை தொழிலாளி. பத்தாம் வகுப்பு தேர்வில் 476 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தேன். தற்போதும் அதே இடம் கிடைத்துள்ளது. ஆசிரியர்கள் நடத்திய பாடத்தையும் மாநகராட்சி வழங்கிய வினா - வங்கி புத்தகத்தையும் கொண்டு தேர்வுக்கு தயார் செய்தேன். தினமும் வகுப்பு பயிற்சி நடத்தியது தேர்வுக்கு கைகொடுத்தது. ஆறு மாதமாக டிவி பார்ப்பதை தவிர்த்து, பாடங்களை எழுதி பயிற்சி எடுத்ததால் தவறுகள் தவிர்க்கப்பட்டது. பி.இ. இ.சி.இ. படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.