பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி, மேற்படிப்பினை தொடர இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இப்பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத்தொகை முதல் வருடத்திற்கு ரூ.1500 வீதமும், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது.