ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிறந்த பயிற்சியாளர் பெற்றோர்கள் தான். பெரும்பாலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிள்ளைகளின் திறமைகளை வெளிகொணர்ந்து சரியான இலக்கை அடையச் செய்வது பெற்றோர்களின் கடமையாகும். அதுமட்டுமில்லாமல் பெற்றோராக மட்டுமின்றி நல்ல நண்பனாகவும் அவரது எல்லாவித வெற்றி, தோல்விகளுக்கும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்று நினைத்தல் தவறாகும். நல்ல பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதில் தோன்றும் எண்ணங்களையும் விருப்பங்களையும் சரியானதா, தவறானதா என தெரிந்து நல்வழியில் நடத்துவது முக்கியமானதாகும். பிள்ளைகளை படிப்பில் மட்டுமின்றி, ஓவியம் வரைதல், மேடை பேச்சு, பாட்டு, விளையாட்டு, மியூசிக், டான்ஸ் போன்ற பல்வேறு கலைகளில் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற பழமொழி கேள்வி பட்டிருக்கிறோம் அந்த பழமொழிக்கு ஏற்றாற்போல் இளம் வயதிலேயே அனைத்து வித கலைகளையும் கற்று வாழ்வில் முன்னேற்ற பாதையே நோக்கி நடக்க பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.