சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியருக்கான பணி வாய்ப்புகள் இருப்பது உண்மைதான். எனினும் சமீப காலத்தில் இது மிகக் குறைவாகவே இருக்கிறது. நல்ல திறனும் தகுதியும் பெற்றவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்புகளைப் பெற சென்னையிலுள்ள ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் என்னும் மையத்தில் நீங்கள் உங்களது தகுதி மற்றும் அனுபவத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த மையமானது தமிழ்நாடு அரசால் நடத்தப்படுவது. இதன் கட்டணங்கள் மிகவும் குறைவானவை. இதில் பதிவு செய்து கொண்டால், எந்த நிறுவனத்தின் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றிய முழு தகவல்களையும் அறிந்த பின்னரே உங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. விபரங்களை அறிய: