இன்ஜினியரிங் தவிர பிற படிப்புகளையும் நமது ஐ.ஐ.டிக்கள் தருகின்றன. ஹியூமானிடிஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகளை இவை தருகின்றன என்பது நமது இளைஞர்கள் பலருக்கும் தெரியாது.
சென்னை, கான்பூர் மற்றும் காரக்பூர் ஆகிய இடங்களிலுள்ள ஐ.ஐ.டிக்கள் ஹியூமானிடிஸ் பிரிவு படிப்புகளைத் தருகின்றன. காரக்பூர் ஐ.ஐ.டியில் சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது என்பது கூடுதல் செய்தி. டில்லி ஐ.ஐ.டி. அடுத்ததாக 2 ஆண்டு எம்.ஏ. படிப்பை விரைவில் தொடங்கவுள்ளது.
வளர்ச்சி மற்றும் கலாசாரம் ஆகிய பிரிவுகளில் இந்தப் படிப்பானது தரப்படும். 2006ம் ஆண்டிலேயே சென்னை பல்கலைக்கழகம் பொருளாதாரம், ஆங்கிலம் மற்றும் வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளைத் துவங்கி நடத்தி வருகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படுகிறது.
30 ஆக இருந்த இதன் சீட்கள் இந்த ஆண்டு 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது விரைவில் 45 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் சில வகுப்புகளை பி.டெக். மாணவர்களோடு சேர்ந்து படிக்கிறார்கள். காரக்பூர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டிக்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி. படிப்பு நடத்தப்படுகிறது.
இதற்கும் நுழைவுத் தேர்வு உண்டு. சில ஐ.ஐ.டிக்கள் இவற்றில் பி.எச்டி. படிப்பையும் நடத்துகின்றன. குவகாத்தியிலுள்ள ஐ.ஐ.டி. தவிர பிற ஐ.ஐ.டிக்களில் மேனேஜ்மென்ட் படிப்புகள் தரப்படுகின்றன. இவற்றில் ஜே.ஈ.ஈ. மூலமாக சேரலாம்.