யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா | Kalvimalar - News

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

  • நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • வட்டி விகிதம்:

    • நான்கு லட்சம் ரூபாய் வரை: BR+2.00% i.e. 12.60% p.a.
    • நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்: BR+2.75% i.e. 13.35% p.a.

    மாணவிகளுக்கு 0.50 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும்.

    கடனை திருப்பி செலுத்தும் முறை:
    படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ)கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

    உத்தரவாதம்:
    நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை
    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us