குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் துணையாக இருப்பது பெற்றோர்கள் தான். அதிலும் நினைவு தெரியாத வயதில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் நல்லது கெட்டது என அனைத்தையும் நமக்கு புரிய வைப்பது தாய் தான்.
ஆனால் சில பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை கெடுத்து விடுகிறார்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் இல்லாமல், வெளி உலகம் அறியாமல் வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்படுகிறது. இந்த நிலை நம் பிள்ளைகளுக்கு வரக் கூடாது.
அணைக்க வேண்டிய இடத்தில் அனைத்தும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும் வளர்த்தால் தான் நம் பிள்ளைகள் சரியான முறையில் வளர்வார்கள். நல்ல தாய் என்பவள் ஒட்டகச் சிவிங்கியைப் போல இருக்க வேண்டும் என்பார்கள்.
ஏன் என்றால்... ஒரு அடர்ந்த காட்டில் ஒரு ஒட்டகச் சிவிங்கி அழகான குட்டியை ஈன்றெடுத்தது. அந்த குட்டி மிகவும் அழகாகவும், மென்மையாகவும் பார்பதற்கே அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அந்த ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியை அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாத்து வந்தது. ஒரு தாயானவள் தன் பிள்ளையை எவ்வாறு தன் உடல் சூட்டில் பாதுகாப்பாலோ அதை போல.
அந்த குட்டி சில நாட்கள் கழித்து மெது மெதுவாக எழுந்து நிற்க முயச்சி செய்தது. அதிக முறை கிழே தவறி தவறி விழுந்து மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக எழுந்து நின்றது. ஆரம்பத்திலிருந்து அதை கண்காணித்த தாய் ஒட்டகச் சிவிங்கி குட்டியின் அருகில் வந்து, எட்டி உதைத்தது. குட்டி சுருண்டு கீழே விழுந்து மறுபடியும் முயற்சித்து எழுந்து நின்றது.
மறுபடியும் உதைக்க முயற்சித்து எழுந்து நின்றது. ஒரு வழியாக தானாகவே எழுந்து வலிமையுடன் நிற்க தொடங்கியது. தாய் ஒட்டகச் சிவிங்கியானது தன் குட்டியை உதைக்காமல் இருந்திருந்தால் காலில் வலிமை இல்லாமல் போய் இருக்கும். இப்போது தாய் ஒட்டக சிவிங்கியை விட வேகமாகவும், வலிமையாகவும், ஓடக் கற்றுக்கொண்டது.
அவ்வாறு தான் பெற்றோர்களும் நம் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரவணைப்பதுடன் இல்லாமல் நம்மை அதட்டவும் செய்கிறார்கள்.
சிறு வயதிலிருந்து நம் தேவைகள் அனைத்தையும் அறிந்து பூர்த்தி செய்யும் தாய்க்கு எல்லா வித உரிமையும் உண்டு. நவீன உலகில் பிள்ளைகள் எதையும் போராடி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. அனைத்தும் தன் கைகளுக்கு எளிதாக கிடைத்து விடுகின்றது.
ஒரு குழந்தை சாதனையாளனாக மாற பெற்றோரின் பங்கு அதிகமானது. அந்த புகழை ஒவ்வொரு பெற்றோரும் அடைய வேண்டும் என்றால் உங்கள் பிள்ளையை சரியான முறையில் வளர்க்க வேண்டியது அவசியம்.