இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் எம்.சி.ஏ., படிப்பு நல்ல பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கான தேர்வு முறைகளும் மிகச் சிறப்பாகவே உள்ளன.
ஆனால் நடைமுறை பயிற்சி பெறும் வாய்ப்பு நேரடி முறையில் படிப்பதை விட கொஞ்சம் குறைவாகவே உள்ளது. கட்டணமும் மிக அதிகமில்லை. இப்படி சேர்க்கை பெற்ற பின் தேவைப்படும் சாப்ட்வேர் மற்றும் பிற பாடங்களை தனியாக ஒரு நல்ல கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பது நல்ல பலனைத் தரும்.