இந்தியாவில் கல்வி நிலை சிறப்பாக இருந்தாலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் கல்விக்கென வசதிகள் உண்டு. தரமான கல்வி நிலையங்கள்,
அவர் நமது கல்விமலர் வெப்சைட்டிற்காக அளித்த சிறப்பு பேட்டி:
இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்கள்,
தரமான கல்வி நிலையங்கள் தேவை: நாட்டில் படித்தவர்களிடம் இருக்கும் மனநிலைமாற வேண்டும். உயர்கல்வி பெற்ற மாணவர்களிடம் கூட ஆங்கிலம் உட்பட பிற மொழிபேச்சுத்திறன் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சகஜமாக அனைத்து மொழிகளிலும் பேசுகின்றனர். நாட்டில் கல்வியின் தரம் உயரவேண்டுமானால் தரம்வாய்ந்த ஆசிரியர்கள், வசதிகளை கொண்டு தரமான கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். அப்போது தான் நாடு கல்வியில் முழுமையான வளர்ச்சி பெறும்.
அழகப்பா பல்கலை.,யில் படிப்புகள்:
எம்.ஏ., எம்.பில்.,
தொலைதூரக்கல்வி மையம்: இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள். கம்ப்யூட்டர்,
எதிர்கால திட்டங்கள்: பல்கலை.,யில் பயோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேடிக்ஸ், நானோ சயின்ஸ், விலங்கியல் சுகாதாரக்கல்வி மற்றும் மேலாண்மை பாடங்கள் துவக்கப்படவுள்ளது. இங்குள்ள அனைத்து துறைகளும் நெட்வசதியுடன் இணைக்கப்படும். தொலைதூரக்கல்வி மூலம் எம்.பி.ஏ., போன்ற முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி வழங்கப்படும். பல்கலை.,யில் ரூ.20 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டப்படும். ஆய்வுக்கூடம் 10 மாடி கட்டடமாக கட்டப்பட்டு மனிதன், விலங்குகள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இது போன்று மேலாண்மை, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சித்துறை, கடலியல் மற்றும் கடலோரவியல் துறைகளுக்கென தனி ஆய்வகமே உருவாக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் ப.ராமசாமி தெரிவித்தார்.
துணைவேந்தர் டாக்டர் ப.ராமசாமி விலங்கியல் மற்றும் பயோ டெக்னாலஜி துறையில் பட்டம் பெற்றவர். அமெரிக்கா நியூயார்க் அறிவியல் கல்வி மைய ஆயுட்கால உறுப்பினர். இந்திய பல்கலை.,களில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணியில் 30 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர். பன்னாட்டு அளவில் 41, தேசிய அளவில் 25 ஆராய்ச்சி கட்டுரைகள்,