டாக்சிக்காலாஜி
நச்சுப்பொருட்கள் மற்றும் ஆபத்தான கதிர்வீச்சினால் மனிதனுக்கு, விலங்குகளுக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி டாக்சிக்காலஜியில் படிக்கின்றனர். அதை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும் ஆராய்கின்றனர். இது பார்மசியில் ஒரு பிரிவாக உள்ளது. பார்மசி படித்தவர்கள் மேல் படிப்புக்கு இதனை படித்தால் வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும். இதில் உயிரியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பார்மாக்காலாஜி, கணிதம், பேத்தாலஜி, இம்யுனாலஜி மற்றும் ஜெனிடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.
டாக்சிக்காலஜி படித்தோருக்கு ஏராளமான நிறுவனங்கள் வேலையை கொடுக்க காத்துக் கொண்டு இருக்கின்றன.
1. குறிப்பாக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தரம் பிரித்து மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்கின்றனர்.
2. மருந்து தயாரிக்கும் கம்பெனிகளில் புதிய மருந்தை கண்டு பிடிக்கும் விஞ்ஞானியாக சேரலாம்.
3. பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி மையங்களிலும் டாக்சிக்காலாஜி சம்பந்தமான துறைகளில் உதவி பேராசிரியராக சேரலாம்.
4. குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் ஆய்வுத்துறையில் சேரலாம்.
5. மருத்துவமனைகளிலும் சேர்ந்து பணியாற்றலாம்.
6. பயோடெக்னாலாஜி நிறுவனங்களிலும், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை வாய்ப்பினை பெறலாம்.
7. அரசுத்துறைகளில் கூட இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.