துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விக் கடன் | Kalvimalar - News

துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விக் கடன்

எழுத்தின் அளவு :

துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தொழிற்கல்வி / தொழில்நுட்ப கல்வியை  பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு அளவில் படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மருத்துவம், பொறியியல், நிர்வாகம், சட்டம், தொழில்நுட்பக் கல்வி, பிசியோதெரபி, நர்சிங் முதலியனவற்றில் பட்டப்படிப்போ அல்லது பட்ட மேற்படிப்போ, டிப்ளமோ படிக்கும் பிள்ளைகளுக்கு நேஷனல் சபாயி கர்மசாரிஸ் பினான்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் கடன் உதவி அளிக்கிறது.

தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய www.nskfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us