பேங்க் ஆப் இந்தியா | Kalvimalar - News

பேங்க் ஆப் இந்தியா

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை

செலுத்த வேண்டிய முன்தொகை:

நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக-இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

வட்டி விகிதம்:

Upto Rs.7.50 lacs – 3% below BPLR., Min. 13.75% p.a.

Above Rs.7.50 lacs upto Rs.2.50 lacs – 2.50% above BPLR, Min. 13.25% p.a

மாணவிகளுக்கு 0.50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

கடனை திருப்பி செலுத்தும் முறை:
படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து (இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை, ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்: சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us