முன்பு மண்டல பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தேசிய தொழில்நுட்பக் கல்லூரி நமது மாநிலத்தில் திருச்சியில் மட்டும் உள்ளது. இது நடத்தும் எம்.பி.ஏ., படிப்பில் சேர கேட் என்னும் பொது நுழைவுத் தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும்.
பட்டப்படிப்பு தகுதி தவிர கேட் தேர்வு மதிப்பெண்களும் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 2009ம் ஆண்டு தொடங்கப்படும் எம்.பி.ஏ., படிப்புக்கு விண்ணப்பிக்க சென்ற மாதமே காலக் கெடு முடிந்து விட்டது. 100 சதவீத வேலை வாய்ப்பைக் கொண்ட படிப்பு இது.