பயாலஜி, பாட்டனி உட்பட்ட பாடப் பிரிவுக்கு இன்று வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறலாம். பரந்து பட்ட வாய்ப்புகளைக் கொண்டது உங்களுடைய பாட்டனி துறை.
சுற்றுப்புறத்திலுள்ள மரங்கள், செடிகள் போன்றவற்றுக்கெதிரான விஷத்தன்மையை அறியும் அரசுத் துறைகள், வெவ்வேறு சூழல்களில் எப்படி தாவரங்கள் வளர்கின்றன என்பதை ஆய்வு செய்யும் ஆய்வகங்கள், எளிய வேதியியல் கூட்டுப் பொருட்கள் எப்படி பெரிய கூட்டுப் பொருட்களாக மாறுகின்றன என்பதைப் படிக்கும் நிறுவனங்கள், புதிய தாவரங்களை உருவாக்கும் அமைப்புகள், பயோடெக்னாலஜி நிறுவனங்களில் நிர்வாகப் பணிகள், பள்ளிகளில் பாட்டனி ஆசிரியர் பணியிடங்கள், டி.என்.ஏ.,வோடு ஒப்பிட்ட ஆய்வு ஆலை நிறுவனங்கள், பொட்டானிக்கல் நிறுவனங்களின் பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் தருவது போன்ற பணிகளில் உங்களது தகுதிக்கு சிறப்பான வேலைகளைப் பெறலாம்.
பிற துறைகளைப் போலவே பாட்டனி துறையிலும் படிக்கும் போதே மாணவர்கள் தங்களது எதிர்கால வேலை எதில் என்பதற்கேற்ப தங்களது படிப்பைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சிறப்பான மதிப் பெண்களைப் பெறுவதோடு இன்டர்ன்ஷிப் போன்ற சிறப்பு நடைமுறைப் பயிற்சியையும் மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிஎச்.டி., போன்ற படிப்புகளையும் உயர் படிப்பாக மேற்கொள்வதும் பலன் தரும்.
இப் படிப்புகளை முடிப்பவருக்கு தனியார் துறையில் மருந்து நிறுவனங்கள், நர்சரிகள், பயோடெக்னாலஜி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பழ உற்பத்தி நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வேதியியல் நிறுவனங்கள், பேப்பர் நிறுவனங்கள், பயாலஜிகல் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஆசிரியர், பாட்டனிஸ்ட், சுற்றுச்சூழல் ஆலோசகர், பார்க் ரேஞ்சர், பிளான்ட் பேதாலஜிஸ்ட், எகாலஜிஸ்ட், விவசாய ஆலோசகர், ஆய்வாளர், தோட்டக்கலை நிபுணர், நர்சரி மேனேஜர் போன்ற பணிகளை நீங்கள் பெற முடியும்.