எந்தத் துறைப் படிப்பானாலும் அதை நேரடியாகவோ தொலைநிலைப் படிப்பாகவோ படிக்கும் போது அதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை விட குறிப்பிட்ட படிப்பு தொடர்பாக நீங்கள் எவ்வளவு திறன் பெற்றிருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
ஏற்கனவே ஒரு பணியிலிருக்கும் நீங்கள் சேரக்கூடிய படிப்பில் இதை நீங்கள் பெற்றால் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே இதை மனதில் கொள்ளவும். நிதித் துறையில் சிறப்பான தொலைநிலைப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் தருகிறது. மேலும் டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் தருகிறது. இவற்றின் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டு உங்களுக்கேற்ற படிப்பைத் தேர்வு செய்யவும்.