இன்றைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் விண்வெளியில் எண்ணற்ற செயற்கைக்கோள்களை இந்தியா போன்ற நாடுகள் ஏவி அதன் பயன்பாட்டை நுகரத் தொடங்கியிருப்பதை அறிவோம். பூமி பற்றிய தகவல்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து படிப்பதே ஜியோமேடிக்ஸ் துறையின் பயன்பாடாகும்.
கனிம கடல் வளங்களை கண்டுபிடிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் எப்படி, நகர வடிவமைப்புக்கு திட்டமிடுவது போன்றவற்றில் இத்துறை இப்போது பெரும் பங்காற்றுகிறது.
பொதுவாக இப்படிப்பை முடிப்பவருக்கு மத்தியஅரசு துறைகளில் பணி வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. விண்வெளி, சுரங்கங்கள் போன்ற பிரிவுகளிலும் பணிவாய்ப்புகள் அதிகம் உள்ளன. புள்ளியியல் துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. அதிக கல்வி நிறுவனங்களால் தரப்படாது படிப்பு என்பதால் இதில் சேர கடும் போட்டியும் இருக்கிறது.