இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம் | Kalvimalar - News

இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்மார்ச் 21,2024,17:28 IST

எழுத்தின் அளவு :

ராமநாதபுரம்: மேல்நிலை அறைத்தேர்வு கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இணை இயக்குநர் பொன்னையா ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஒருமையில் ஆசிரியர்களை பேசியுள்ளார்.


ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு துணை போவார்கள் என்ற தோற்றத்தினை உருவாக்கும் விதத்தில் வெளி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்ளடக்கிய பறக்கும் படையினரை நியமனம் செய்துள்ள இணை இயக்குநரை கண்டித்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடக்கிறது.


முதுகலை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். சம்பந்தப்பட்ட இணை இயக்குநரை மேற்பார்வை அலுவலர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us