குடிநீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. டிசம்பர் 1992 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஐ உலக தண்ணீர் தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி 1993 மார்ச் 22 அன்று முதல் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய நாடு உலக நீர் மேம்பாட்டு அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.